சென்னை: விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு U/A தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு – ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் KVN தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா ஆணை பிறப்பித்தார். விசாரணையின்போது,  ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு எப்படி ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும்  என கேள்வி எழுப்பியதுடன்,  படத்தில், பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், அதற்கு  தணிக்கை சான்று வழங்கியாக வேண்டும். அதனால், ஜனநாயகன் படத்தை மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும்,   படத்திற்கு U/A சான்று வழங்கியதும் தலைவருக்கான அதிகாரம் முடிந்தது என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும்,  தணிக்கை தலைவர் அதிகாரத்தை மீறி மறு ஆய்வுக்கு அனுப்பியதால் நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது என்றும்  நீதிபதி பி.டி.ஆஷா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து  தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்த நிலையில், திங்கள்கிழமை அன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால், எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]