சென்னை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் நேற்று தம்மை அமலாக்கத்துறையினர் துன்புறுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

கடந்த மார்ச் மாதம் தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையால் சென்னையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக் மீது போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக கூறி ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து அவரை கைது செய்தது.

வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை முதலில் 3 நாட்களும், அதன்பின்பு 4 நாட்களும் என மொத்தம் 7 நாட்கள் அமலாக்கத்துறை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். நேற்றுடன் இந்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்ததால்ல், நேற்று மாலை ஜாபர் சாதிக் சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி, அமலாக்கத்துறையினர் தங்களை துன்புறுத்தினார்களா? என ஜாபர் சாதிக்கிடம் கேள்வி எழுப்பியதற்கு ஜாபர் சாதிக், ‘அமலாக்கத்துறையினர் துன்புறுத்தவில்லை’ என பதில் அளித்தார். பிறகு வரும் 29-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதையொட்டி புழல் சிறையில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த  மனுவை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.