சென்னை

சிறார்களின் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் வலியுருத்தி உள்ளது

தற்போது 5 வயதுக்கும் கீழ் உள்ள சிறார்களுக்கு பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவற்றை வைத்து ஆதார் எண் வழங்கப்படுகிறது. இவர்கள் 5 வயதை தாண்டும் போது ஆதாருடன் கருவிழி, கைரேகை பதிவுகளை இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி 5 முதல் 7 வயதுடைய சிறார்களை அருகில் உள்ள சேவை மையங்கள், தபால் நிலையங்கள், அரசால் அங்கீகரிக்கபப்ட்ட ஆதார் மையங்களுக்கு அழைத்துச் சென்று இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் என்றும், 7 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகும் 7 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஆதார் எண்ணுடன் கைரேகை, கருவிழி இணைக்காவிட்டால் ஆதார் அட்டை செயலிழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிப்பு தொடர்பாக சிறார்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.