சென்னை: “சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்தான் கூட்டணி தர்மமா என கேள்வி எழுப்பி உள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி,   “அரசாங்கத்தில் பங்கு பெற விரும்புகிறோம்“  என ஓப்பனாக கூறியதுன், அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை என்றும் வலியுறுத்தி உள்ளார்.

கே.எஸ். அழகிரியின் இந்த பேச்சு திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்று சில காங்கிரஸ் தலைவர்கள் பேசி வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவரை, திமுகவுக்கு இழுத்த முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயலை, அத்தொகுதி எம்.பி.யான ஜோதிமணி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில்,  சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த : தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆட்சியில் பங்கு என குரல் எழுப்பி உள்ளார்.  “50 -60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிப்பதாகவும் சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்மான சூழல் நிலவுகிறது“ என தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி​குறைப்பு மாபெரும் புரட்சி என்​றும், ஆண்​டுக்கு ரூ.2.50 லட்​சம் கோடி மீத​மாகும் என்​றும் பிரதமர் தெரி​வித்​துள்​ளார். ஆனால், கடந்த 8 ஆண்​டு​களில் 4 வகை​யான உயர்ந்த வரி​களை விதித்து ரூ.55 லட்​சம் கோடியை மக்​களிட​மிருந்து வசூலித்​துள்​ளனர். பாஜக ஆட்​சி​யில்​தான் வரி அதி​க​மாக்​கப்​பட்​டது. மக்​களை 8 ஆண்​டு​களாக ஏமாற்​றி​யுள்​ளனர் என்று சாடியவர், பின்னர் செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் கூறினார்.

செய்தியாளர் ஒருவர் கரூரில் காங்​கிரஸ் தலை​வரை, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி திமுக​வில் சேர்த்​தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர், செந்தில் பாலாஜியின் செயல்  நாகரி​க​மற்ற செயல் என சாடியதுடன்,  எங்​கள் தலை​வர் ராகுல், அரசி​யல் ரீதி​யாக​வும், அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டும் ஸ்டா​லினின் சிறந்த நண்​பர் என கூறி வருகிறார் என்றார்.

மேலும், தேர்தல் கூட்டணி, அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு,   வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்றும்,  அமைச்​சர​வை​யில் பங்கு கேட்​பது எங்​களது உரிமை என்று கூறினார். அதற்​காக நாங்​கள் கூட்​டணி மாறி​விடு​வோம் என்பது அல்ல என்று சால்ஜாப்பு கூறியதுடன்,   வேறு கூட்​ட​ணி​யில் சேர்ந்து விடு​வோம் என்று கூறு​வது வதந்​தி​ என்று மறுத்தார்.

திமுக​வினர் எங்​கள் நண்​பர்​கள். காங்​கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்​ளது. அதனால்,  அவர்​களிடம் நாங்​கள் உரிமை​யைக் கேட்​கிறோம் என்றார்.

எடப்பாடியின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி அரசி​யல் பேச வேண்​டுமே தவிர, தனி நபர் விமர்​சனம் செய்​யக் கூடாது.  செல்​வப்​பெருந்​தகையை பற்றி அவர்  தனி நபர் விமர்​சனம் செய்​கிறார், அது தவிர்க்கப்பட வேண்டும் அதுபோல,   எங்​களை, திமுக​வின் விசு​வாசி என்று பழனி​சாமி கூறு​வதும் தவறான​து என்றார்.

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, அதற்கு சாத்தியமில்லை என்றதுடன்,  தவெக​வால் திமுக கூட்​ட​ணிக்கு நிச்​ச​யம் பாதிப்பு ஏற்​ப​டாது. எங்​களுக்கு 45 சதவீதத்​துக்​கும் கூடு​தலான வாக்​கு​கள் உள்​ளன என்றார்.

மேலும்,  தவெக வாக்கு சதவீதம் இது​வரை நிருபிக்​கப்​பட​வில்​லை. அதி​முககூட 20-லிருந்து 23 சதவீதத்​துக்கு மேல் இம்​முறை வாக்​கு​களைப் பெற முடி​யாது. அவர்​களு​டன் கூட்டு சேருபவர்​கள் பலவீன​மான நிலை​யில் உள்​ளனர். எனவே, வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​டணி நிச்​ச​யம் வெற்றி பெறும்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.