சென்னை: கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அதுதொடர்பாக பதிவு போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!
இவ்வாறு கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]