டெல்லி: ஹார்முஸ்  ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், இந்திய அரசு நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணையைரஷியா, அமெரிக்காவிலிருந்து  அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.  இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெட்ரோல், டீசல் எரிவாயு விலைகளும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

எண்ணை வளங்களை கொண்ட ஈரான்மீது இஸ்ரோல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  அமெரிக்க ராணுவமும், , ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  உலக நாடுகளுக்கு செக் வைக்கும் வகையில்,  உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த ஜலசந்திய  வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

ஈரானின் இந்த நடவடிக்கையால், இந்தியா அரசு, நமது நாட்டு தேவைக்காக,  ரஷியா அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது.