போபால்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.