டெல்லி

டை விதிக்கப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.  ஆயினும் அவற்றை பல மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.  குறிப்பாக குழந்தைகளுக்கு இது போல மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது வெகுகாலமாக நடந்து வருகிறது.

குறிப்பாக நிம்சுலைடு எனும் வலி நிவாரணி மருந்து, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருளை உருவாக்குவது தெரியவந்தது. எனவே இந்த மருந்தை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 13 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்திருந்தது.

ஆனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்கும் ஐ.பி.சி. சமீபத்தில் நடத்திய ஆய்வில், நிம்சுலைடு மருந்து தற்போதும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருவது தெரியவந்தது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்கும் ஐ பிசி தற்போது போஸ்டர்கள் மூலம், மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சுமார் 13 வருட தடைக்கு பிறகும் இந்த மருந்துகள் விநியோகத்தில் இருப்பது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.