நெல்லை: கல்லூரி மாணவியை மது விருந்துக்கு மாணவியை அழைத்த நெல்லை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்களில் ஒருவர் தலைமறைவான  நிலையில், மற்றொருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளி மதுபோதை கலாச்சாரம் ஊடுருவி உள்ள நிலையில் சமீப காலமாக பாலியல் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. வேலையே பயிரை மேய்வது போல, பள்ளி மாணாக்கர்களுக்கு குருவாக செயல்பட வேண்டிய ஆசிரியர்களே பள்ளி மாணவிகளை மேயத்தொடங்கி உள்ளனர். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்த விவகாரம் மற்றும் பாளை சவேரியார் கல்லூரி மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர் தொடர்பாக ஏராளமான புகார்கள் வெளியாகின.

இந்த விவகாரத்தை பள்ளி, கல்லூரி நிர்வாகம் ஆரம்பத்தில் மூடி மறைத்த நிலையில்,  அதற்கு ஆதரவாக காவல்துறையும் செயல்பட்டது. அதனால், இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நிலையில்,  புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்தே  மாணவி ஒருவரை மது குடிக்க அழைத்த நெல்லை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்கள் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றொருவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரி. இக்கல்லூரியில் பணியாற்றும் செபாஸ்டியான் மற்றும் மற்றொரு பேராசிரியர் மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மது அருந்த அழைத்துள்ளார். மேலும் மாணவிக்கு இரவில் செல்போனில் அழைத்து ஆபாசமாகப் பேசி தொல்லைக் கொடுத்துள்ளார்.

பேராசிரியர்களின் அத்து​மீறல் தொடர்பாக மாணவி புகார் அளித்த நிலையில், கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவ்லலை. இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவி அளித்த புகாரில் 2 பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் செபஸ்டியான் கைது செய்யபட்டுள்ளார். தலைமறைவான பேராசிரியர் பால்ராஜை போலீசார் தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து,  பேராசிரியர்கள் இருவரை பணி நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாளையங்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்கள் போக்சோவில் கைது! கல்லூரி ஆசிரியர்கள் கைது எப்போது?

மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! திருச்சி அரசு மருத்துவர் கைது…