ஸ்ரீஹரிகோட்டா:  இன்று  (மே 18ந்தேதி) காலை விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி  அடைந்துள்ளது குறித்து  ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம்    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய ட் ஏவுதளத்தில் இருந்து  இன்று அதிகாலை ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட், 3வது கட்ட பிரிவின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் தோல்வி அடைந்தது.   இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் 101-வது ராக்கெட்டானது வெற்றிகரமாக விண்ணில் பறந்த நிலையில், அதன் சுற்றுவட்டப்பாதையின்போத,  ராக்கெட்டிலிருந்து 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்தது.

இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில்,  ராககெட்டின் 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது.

பிஎஸ்எல்வி – சி61 ராக்கெட் மொத்தம் நான்கு கட்டங்களாக செயல்படுகிறது. அதன்படி,  தரையில் இருந்து விண்னை நோக்கிய முதல் 112 விநாடி பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தொடர்ந்து இரண்டாவது நிலை இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு, அடுத்த இரண்டரை மணி நேரமும் ராக்கெட் திட்டமிட்டபடி செயல்பட்டது. 263வது விநாடியில் ராக்கெட்டின் மூன்றாவது கட்ட பிரிவு பணிகள் தொடங்கியது. சுமார் 2 நிமிடங்கள் நீடித்து இருக்க வேண்டிய இந்த கட்டத்தில் தான், சுமார் 336 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிந்தபோது, உந்துதலுக்கான உரிய அழுத்தம் இன்றி ராக்கெட் கட்டுப்பாட்டை அறையுடனான இணைப்பை இழந்து தரையை நோக்கி சரிந்தது. இதனால், இஸ்ரோவின் பிஎஸ்எல்வி – சி61 ராக்கெட்டின் பயணம் தோல்வியில் முடிந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  இஸ்ரோ தலைவர் நாராயணன், இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது. 2-வது அடுக்கு பிரியும் வரை பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டின் செயல்பாடு சரியாகத்தான் இருந்தது. 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. 3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும்.

 “ராக்கெட்டின் மூன்றாவது கட்டத்தை செயல்படுத்தும்போது, எங்களால் கண்காணிப்பு மற்றும் திட்டத்தின் இலக்கை பூர்த்தி செய்யமுடியவில்லை. மூன்றவாது கட்டத்தில் பயன்படுத்தப்படும் சாலிட் அதாவது திடநிலை ராக்கெட் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறே திட்டத்தின் தோல்விக்கு காரணமாக கருதபப்டுகிறது.

வான்வெளியை அடைந்த பிறகு அதிகபட்சமாக 240 கிலோ நியூட்டன்ஸ் உந்து சக்தியை வழங்கக் கூடிய திறன் கொண்ட இந்த மோட்டாரில் கோளாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து வருகிறோம். இதுகுறித்து விரைவில் விளக்கம் அளிக்கப்படும்” என செய்தியாளர் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் விளக்கினார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் தோல்விகள்:

போலார் சாட்லைட் லாஞ்சிங் வெஹைகிள் எனப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவரை, இஸ்ரோவால் 63 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் 60 முறை வெற்றிகரமாக இலக்குகள் அடையப்பட்டுள்ளன. வெறும் மூன்று முறை மட்டும் தோல்வியை கண்டுள்ளன.

  • முதல்முறையாக கடந்த 1993ம் ஆண்டு PSLV-D1 என்ற பெயரில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், இரண்டாம் நிலை பிரிவின் போது வெடித்து சிதறியது
  • தொடர்ந்து, 24 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017ம் ஆண்டுதான் பிஎஸ்எல்வி இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்தது. PSLV- C39 ராக்கெட்டில் இடம்பெற்று இருந்த செயற்கைகோளின் வெப்பக் கவசம் செயல்படாததால் திட்டம் தோல்வியுற்றது.
  • அதனை தொடர்ந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு EOS-09 எனப்படும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் பணியில் பிஎஸ்எல்வி தற்போது தோல்வியுற்றுள்ளது.

PSLV-C61 மிஷன், PSLV-யின் 63வது பயணத்தையும், PSLV-XL கான்ஃபிகரேஷனை பயன்படுத்திய 27வது பயணத்தையும் குறிக்கிறது. இது மேம்பட்ட உந்துதல் மற்றும் பெரிய சுமை திறனுக்காக அறியப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வேரியண்டாகும். இந்த திட்டமானது செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில், குறிப்பாக அனைத்து வானிலை பூமி கண்காணிப்புக்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.