இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்தார்.

50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவர் நேற்று நடைபெற்ற போட்டியில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதில் தங்கம் வெல்வது உறுதி என்று பயிற்சி எடுத்து வந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அளவுக்கு அவரது எடை கூடுதலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் இறுதிப் போட்டியில் விளையாட அனுமதிப்படவில்லை தவிர இந்தப் பிரிவில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் மட்டுமே வழங்கப்படும் என்று வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கூட வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா பிரச்சனையை உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள சென்ற வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

இந்த நிலையில் வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்ததாக ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்திருப்பது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.