ண்டன்

ந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கட் பந்தயம் நடந்து வருகிறது.   இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுப் பாதிப்பு இல்லை என முடிவு வந்தவர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுகின்றன. 

அவ்வகையில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் இருமுறை சோதனை நடந்துள்ளது.  தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் பந்தயத்தின் 4 ஆம் நாள் ஆட்டத்தில் கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்தவர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் ஆகியோரும் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.   தற்போதைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் நன்கு விளையாடினாலும் பயிற்சியாளர்கள் இல்லாததால் பதட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.