டெல்லி
நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது/

கடற்படை சார் தளவாடங்களை பாகிஸ்தான் நாட்டிற்கு அதிக அளவில் நெதர்லாந்து வழங்கி வருகிறது. அதாவது சீனா மற்றும் துருக்கிக்கு பிறகு அதிக அளவு பாக்கிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக நெதர்லாந்து உள்ளது.
நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு நவீன கன்னிவெடி தகர்ப்பு கப்பல்கள், கடலோர ரோந்து கப்பல்கள் போன்றவற்றை சப்ளை செய்து வருகிறது.
இதையொட்டி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்,
”பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நெதர்லாந்து நிறுத்த வேண்டும்.”
என கடந்த 18-ம் தேதி நெதர்லாந்து நாட்டிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel