டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் புதிதாக கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,24,74,773 ஆக உள்ளது.  இது நேற்றைய பாதிப்பை விட 395 அதிகம்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 389 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 4,35,110 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 39,486 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,17,20,112 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,19,551 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 58,89,97,805 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 63,85,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.