அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் iPhoneகள் தற்போது சீனாவிலேயே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் நிலவி வருவதை அடுத்து அதன் உற்பத்தியை வேறு நாடுகளுக்கு மாற்ற Apple நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே Apple நிறுவனம் தனது உற்பத்தியை அமெரிக்காவில் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவருகிறார்.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன், ஐ-பாட் மற்றும் கடிகாரங்கள் ஆகியவற்றின் உற்பத்தியை சீனாவில் மேற்கொள்வதை நிறுத்தியுள்ளது.
ஐ-போன் உற்பத்தியை இந்தியாவுக்கும் ஐ-பாட் மற்றும் கடிகாரங்கள் ஆகியவற்றின் உற்பத்தியை வியட்நாமுக்கும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.
இதையடுத்து அடுத்த சில மாதங்களில் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் அமெரிக்க சந்தைக்கு தங்கள் உற்பத்தியை ஏற்றுமதி செய்ய உள்ளன.