இந்தியா – பிரிட்டன் இடையே சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
உலக நாடுகள் பலவற்றுக்கும் அமெரிக்கா வரி உயர்வை அறிவித்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் இந்தியா உள்ளிட்ட வேறு சில நாடுகளுடன் வர்த்தகம் செய்ய தயாராகி வருகின்றன.
அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரிட்டன் தனது முதல் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளது.
இதன்மூலம் விஸ்கி, ஜின், கார்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய பிரிட்டன் தீர்மானித்துள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய பிரச்சனையாக, இங்கிலாந்துக்கு வரும் தனது குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்திய சமையல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் யோகிகள் இங்கிலாந்துக்குச் செல்வது எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிரிட்டனில் உள்ள அதன் தற்காலிக தொழிலாளர்கள், அவர்களின் முதலாளிகளுடன் சேர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் தேசிய காப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்று இந்தியா கூறியது.
இந்த ஒப்பந்தம் விஸ்கி மற்றும் ஜின் மீதான வரிகளை உடனடியாக 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகக் குறைக்கும், அதைத் தொடர்ந்து 2035 ஆம் ஆண்டில் 40 சதவீதமாகக் குறைக்கும். இது வாகன வரிகளை 100 சதவீதத்திலிருந்து வெறும் 10 சதவீதமாகக் குறைக்கும், இது பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளர்களுக்கு இந்திய சந்தையைத் திறக்கும்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான தடைகளைக் குறைப்பதால், ஆடைகள், காலணிகள் மற்றும் உறைந்த இறால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான வரி குறையும் என்று இங்கிலாந்து மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.