நாடாளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் நான்கு மாநில சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் நமக்கு கிடைத்த வெற்றியுடன் திருப்தியடையாமல் மக்கள் நம் மீது வாய்த்திருக்கும் நல்லெண்ணத்தை தக்க வைத்துக்கொள்ள நாம் அதே வேகத்துடன் பணியாற்ற வேண்டும்.

ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் லோக்சபா தேர்தலில் அடைந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் அடையும் பட்சத்தில் அது தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.