சென்னை: சுதந்திர தினம் உள்பட நான்கு நாட்கள் தொடர் விடுமுறை  வருவதால்,  தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், இன்று மாலலைம முதல் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதனப்டி, சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாளை சுதந்திர தினம் விடுமுறை மற்றும், நாளை மறுநாள் வரலட்சுமி விரதம் என்பதால், அன்று அரசு ஊழியர்களுக்கு வரையறுக்க பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இந்துக்கள் பணிக்கு வரமாட்டார்கள், தொடர்ந்து, சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதையொட்டி, பெரும்பாலோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இதன் காரணமாக,  இன்று முதல் சென்னையில் இருந்து  வெளியூர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

சென்னை  கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தம் 470 பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது. அதேபோல, நாளை மறுநாளான 16ம் தேதி மற்றும் 17ம் தேதியும் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 365 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

கிளாம்பாக்கம் மட்டுமின்றி கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூர், நாகை, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று 70 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் மற்றும் 17ம் தேதி 65 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை மட்டுமின்றி பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழக அரசு போக்குவரத்து துறை வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து 200 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

மேலும், ஆந்திராவிற்கு பேருந்துகள் இயக்கப்படும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று, வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கிடையில் சென்னை மாநகர பேருந்தும் அதிகஅளவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இன்று மாலை அதிகளவில்   வெளியூர் செல்லும் பணிகளின் கூட்டம் பேருந்து நிலையங்களில்  அதிகம்  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல ஏதுவாக அதிகளவு பேருந்துகள் பல பகுதிகளில் இருந்து இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.