ஒளிரும் சுதந்திரம்

ஓங்கி ஒலித்திடும் குரலில்
ஒற்றுமை தெரியட்டும்
ஒன்று படுவோம்!!!

கோர்த்த சகோதர, கைகளால் காத்து நிற்போம் தேசத்தை!!

கொடியை வணங்கிடும் பணிவில் காட்டுவோம் நம் பற்றினை!!!!

போராடியவர்களை
புனிதர்களாக,,,
போற்றி, போற்றி மகிழ்ந்திடுவோம்

தியாகத்தை எண்ணிடுவோம்
திரு நாட்டை உயர்த்திடுவோம்.!!!

புலியின் வீரத்தோடு புதிய இந்தியாவை காப்போம் ..
புத்துயிர் கொடுப்போம்
பாரதத்துக்கு!!!

ஜெய்ஹிந்த் எனும் கோஷம் ,
ஜெகமெங்கும் பரவட்டும்
ஜெயித்து காட்டுவோம்
!!

எட்டுத்திக்கும் கொட்டும் முரசால் ,
எதிர்கால இந்தியா வல்லரசாக மாறும்!!

ஒவ்வொரு வீட்டையும் ஒளியால் அலங்கரிப்போம் !!
அனைவரின் விழா
இதுவென்போம் !

அச்சங்களை எடுத்தெறிந்து விட்டு, உச்சங்களை தொட எத்தனிப்போம்,..இன்றே!

இனிப்புகளை பரிமாறி
இதயங்களை
அன்பால் நிரப்பிடுவோம்
இன்று!

தேச பக்திக்கு
தெய்வமே தலை வணங்கிடும்,
வண்ணம், நேசிப்போம் நம்
தேசத்தை!!

நினைவூட்ட மட்டுமல்ல இவ்விழா நிறைவை எட்டுவதற்குமானது!

நமது தேசம் செழித்து உயர, நாளும் கொடுப்போம் நம் உழைப்பை!

விலை மதிப்பற்ற சுதந்திரத்தை
வானுள்ள வரை பாதுகாப்போம் !!

ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் ஒளிரும் சுதந்திரத்தை பரவச் செய்வோம்!
பாரெங்கும்!

ஆடிப்பாடி ஓடி விளையாடி வரவேற்போம் !!
இது நமக்கே. …
நமக்கான தினம்!

பா.தேவிமயில் குமார்