திருவனந்தபுரம்:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாகவும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து 3வது நாளாக இன்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தியாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கு மேல் கேரளாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel