சென்னை: குடிநீர் குழாய்கள் இணைப்பு பணி நடைபெறுவதால், சென்னையின் சில பகுதிகளில் 22ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படு வதாக சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னை ஆலந்தூரில் உள்ள பால் வெல்ஸ் சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் குடிநீர் குழாய்களை இணைக்கும் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் 2 நாட்களுக்கு நிறுத்தப்படுவவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ஆலந்தூரில் உள்ள பால் வெல்ஸ் சாலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் குடிநீர் குழாய்களை இணைக்கும் பணிகளை மேற்கொள்ள உதவியாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக, சென்னை மற்றும் பல்லாவரம் நகராட்சியின் சில பகுதிகளுக்கு வருகிற புதன்கிழமை (ஜனவரி 22) இரவு 9 மணி முதல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) இரவு 9 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தேனாம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களுக்கும், பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட பொழிச்சலுார், கவுல் பஜார் ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் வராது
குடியிருப்பாளர்கள் முன்கூட்டியே தண்ணீரை சேமித்து வைக்கலாம், ஆன்லைன் சேவை மூலம் தண்ணீர் டேங்கர்களை முன்பதிவு செய்யலாம் மற்றும் விவரங்களுக்கு 044-45674567 ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம்.
இருப்பினும், இந்த பகுதிகளில் தெருக்களுக்கு விநியோகம் செய்வதை சென்னைக் குடிநீர் வாரியம் தொடர்ந்து வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.