சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து காலம் வரும்போது பதில் சொல்கிறேன்  என தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பயணித்து வந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தர அதிமுக மறுப்பு தெரிவித்தநிலையில், அக்கட்சி கூட்டணி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  தி.மு.க.வுடன் கூட்டணியா? த.வெ.க.வுடன் கூட்டணியா?  என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய  பிரேமலதா காலம் வந்ததும் பதில் சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

தேமுதிக  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா  இன்று 2026 சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேற நிகழ்வுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.  ஏற்கனவே திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ள நிலையில், தேமுதிகவும் தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

முன்னதாக,   கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காலியான மேல்சபை எம்.பி. பதவி இடம் அந்த கட்சிக்கு ஒதுக்கப்படாததால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும், தேமுதிக நிர்வாகிகளுடனான ஆலோசனையில் பிரேமலதா உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம், ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று முதல்நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று  காலை,   தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தே.மு.தி.க. தனித்து போட்டியா?  என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றவர், 2026 சட்டசபை தேர்தலில் தேவைப்பட்டால் தனித்து போட்டியிடவும் தேமுதிக  தயார் என்று கூடறினார்.

அதையடுத்து தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  கூட்டணி குறித்து முடிவு செய்ய சில காலம் தேவைப்படுகிறது என்று கூறி பதில் தெரிவிக்க மறுத்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், கூட்டணி ஆட்சி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர்,  தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் வரவேற்கிறோம் என்றார்.

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்ற கேள்விக்கு,  ராஜ்யசபா சீட் குறித்த ஒப்பந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடவில்லை, 2026ல் தங்களுக்கு சீட் தருவதாக கூறியிருக்கிறார்கள் என்றார்.

இதைத்தொடர்ந்து மற்றொரு செய்தியாளர், அப்படியென்றால், 2026 தேர்தலில்,  தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்று  கேள்வி எழுப்பினார். அதற்கு, அதை திமுகவிடம் கேளுங்கள் என்றார்.

அப்போது செய்தியாளர்,  நீங்கள் விஜய் கட்சியான தவெகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கும்,  அதை  விஜயிடம் தான் கேட்க வேண்டும் என்று ஏட்டிக்போட்டியாக பதில் தெரிவித்தார்.,

இதையடுத்து நிரூபர் ஒருவர்,  தி.மு.க. அழைத்தால் அக்கட்சியின் கூட்டணி அமைப்பீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய பிரேமலதா, காலம் வந்ததும் பதில் சொல்கிறேன் என்று அவர் கூறினார்.