சென்னை; “நான் தனி ஆள் இல்ல… கடல்!” என மதுரை மாநாடு செல்ஃபி வீடியோவை பகிர்ந்த தவெக தலைவர் விஜய் அகங்காரமாக பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும்போதும், இதுபோல லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவது வழக்கமானது. ஆனால், விஜய் தனது கட்சி மாநாட்டில்தான் இதுபோன்று மக்கள் கூட்டம் கூடி இருப்பதுபோல அகங்காரமாக தெரிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மதுரை மாநாட்டில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பதவியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை மரியாதை குறைவாக விமர்சித்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது, நான் ‘தனி ஆள் இல்லை… கடல் நான்!’ – மதுரை மாநாட்டு செல்ஃபி வீடியோவை பகிர்ந்து அகங்காரமாக தெரிவித்துள்ளார். தனது ரசிகர்களின் ஆதரவு, வாக்குகளாக விழும் என்ற மிதப்பில் அவர் பேசிய வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விசிலடிச்சான் குஞ்சுகளை சேர்த்துக்கொண்டு அவர் செய்யும் அலப்பறை அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாகவும், ஊழலுக்கு எதிராக பேசி வரும் விஜய், தனது காருக்கு உரிய வரி செலுத்த மறுத்தது அனைவரும் அறிந்ததுதானே, விஜயின் செயல் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகவும், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையை போல அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, பெற்ற தாய் தந்தையரை மதிக்க தெரியாத அவர், ஆதவ் அர்ஜூனா போன்ற ஊழல் பெருச்சாலிகளை வைத்துக்கொண்டு எப்படி ஊழலை ஒழிப்பார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் தனக்கு உள்ள ரசிகர்களின் ஆதரவை வாக்கு வங்கிகளாக மாற்றும் நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, கடந்த 2024-ம் ஆண்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் மூலம் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி இருந்தார். அதோடு நேரடி அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் ‘ஜனநாயகன்’ படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு (2025) அக்டோபரில் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதில் தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.
பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக களத்துக்கே சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்த நிலையில், மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநாட்டில் ‘எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையில்தான் போட்டி’ என விஜய் தெரிவித்தார். அதோடு மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக அரசை எதிர்த்து பேசினார். முன்னதாக, மதுரை மாநாட்டில் ‘ரேம்ப் வாக்’ மேற்கொண்டிருந்தார் விஜய். அப்போது அவரை நெருங்க மாநாட்டுக்கு வந்திருந்த பலரும் முயற்சித்தனர். அதேநேரத்தில் சினிமா நட்சத்திரமான விஜய்யை நேரில் பார்த்து பலரும் ஆரவாரம் செய்திருந்தனர். அதைப் பார்த்து மகிழ்ந்த விஜய் தனது போனில் செல்ஃபி வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) அதை எக்ஸ் சமூக வலைதளத்தில் நடிகர் விஜய் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில்,
“உங்க விஜய் உங்க விஜய்
உயிரென வர்றேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
தனி ஆள் இல்ல… கடல் நான்” என அதற்கு விஜய் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இதை அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
விஜயின் அகங்கார போக்கு அவரை அழிவுபாதைக்கு அழைத்துச்சென்றுவிடும் என அரசியல் நோக்கர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.