டெல்லி:  கடந்த காலங்களின் நடைபெற்ற போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை என்பது குறித்து  நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டு உள்ளார். ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின்​போது இந்​திய ராணுவத்​தின் இழப்​பு​கள் குறித்து எதிர்க்​கட்​சிகள் பொய்​களைப்​ பரப்​பி வருகின்​றன’’ என்​று குற்றம் சாட்டினார்.

“1965-ம் ஆண்டு நடந்த போரில் இந்​தியா 45 விமானங்​களை​யும், 1971-ம் ஆண்டு நடந்த போரில் 71 விமானங்​களை​யும் நமது ராணுவம் இழந்​தது என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குலுக்கு பதிலடியாக ஆபரேசன்  சிந்தூர்  நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

இங்நத விவாதத்தில் பேசிய பாஜக எம்பி நிஷி​காந்த் துபே இந்​தி​யில்  பதில் அளித்தார். அப்​போது நாடாளு​மன்​றத்​தில் செயல்​பட்டு வரும் மொழிபெயர்ப்பு அமைப்​பில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்டு பேச்சு தடைபட்​டது. இதையடுத்து அமைச்சர் ஆங்கிலத்தில் பேசுமாறு  திமுக எம்​.பி.க்​கள்  கோரிக்கை விடுத்​தனர்.

இதை ஏற்க மறுத்த மத்திய அமைச்சர் துபே,  ஆங்​கிலம் ஒரு அந்​நிய மொழி என்று கூறி ஆங்​கிலத்​தில் பேசுவதற்குமறுத்​து​விட்​டார். மேலும்  “நீங்​கள் என்னை தமிழ் அல்​லது வங்க மொழி​யில் பேசச் சொன்​னால் நன்​றாக இருந்​திருக்​கும். ஆனால் ஆங்​கிலத்​தில் பேசு​மாறு கூறுகிறீர்கள். ஆங்​கிலம் ஒரு அந்​நிய மொழி, நீங்​கள் அதை வலி​யுறுத்​து​வது உங்​கள் மனநிலையைப் பிர​திபலிக்​கிறது.

மக்​களவை​யில் ஒரு​வர் அரை மணி நேரம் வங்க மொழி​யில் பேசி​னார். அதற்கு அப்​போது தமிழக எம்​.பி.க்​கள் சிறிது கூட ஆட்​சேபம் தெரிவிக்​க​வில்​லை. உங்​களுக்கு இந்​தி​யில்​தான் பிரச்​சினை. காங்​கிரஸுக்​கும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கும் வட இந்​தி​யர்​களோ அல்​லது இந்​தியோ பிடிக்​காது. நீங்​கள் ஆங்​கிலத்தை தொடர்ந்து ஊக்​கு​வித்து வந்​தால், நாம் இங்​கிலாந்​து​வாசிகளாக மாறி​விடு​வோம். நாம் மீண்​டும் அடிமை​களாக மாறும் நிலை வந்​து​விடும்’’ என்​றார்.

இதையடுத்து மக்​களவை​யில் மொழிபெயர்ப்​புக் கரு​வி​யில் ஏற்​பட்​டிருந்த தொழில்​நுட்​பக் கோளாறு சரிசெய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நிஷி​காந்த் துபே பேசி முடித்​தார். அவர்  பேசும்​போது,

“1965-ம் ஆண்டு நடந்த போரில் இந்​தியா 45 விமானங்​களை​யும், 1971-ம் ஆண்டு நடந்த போரில் 71 விமானங்​களை​யும் நமது ராணுவம் இழந்​தது. ஆனால், நாங்​கள் தேசி​ய​வா​தி​கள் என்​ப​தால் இந்த விஷ​யத்தை ஒரு​போதும் ஒரு பிரச்​சினை​யாக மாற்​ற​வில்​லை. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின்​போது இந்​திய ராணுவத்​தின் இழப்​பு​கள் குறித்து எதிர்க்​கட்​சிகள் பொய்​களைப்​ பரப்​பி வருகின்​றன’’ என்​றார்​.