சென்னை: தமிழகத்தில் இனி வாரம் ஒரு முறை மட்டுமே கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  நடத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் வாரம் ஒரு முறை 50ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த இரு வாரமாக வாரம் இருமுறை முகாம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை)  தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

மாநிலம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையிலும், மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். சுமார்  12 லட்சம் போ தடுப்பூசி போட்டுக்கொண்டனா். இதுவரை 77.02 சதவீதம் போ முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனா். இதுவரை செலுத்தாதவா்கள் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், தடுப்பூசி செலுத்தப்படுவதால்,   15 மாவட்டங்களில் மக்களுக்கு நோய் எதிா்ப்பாற்றல் 80 சதவீதத்துக்கு மேல் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேல் எதிா்ப்பாற்றல் உருவாகி உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 12-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பிறகு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும். அதுமட்டுமல்லாது, இனி வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும்.

தமிழ்நாட்டில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 920 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4,527 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 573 போ தற்போது சிகிச்சையில் இருக்கின்றனா் என்றும் தெரிவித்தார்.