சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 6ந்தேதி வரை மேலும் 5 நாட்கள் மழை நீட்டிக்கும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் 29-ந் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று  தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்றுமுதல் வருகிற 6-ந் தேதி வரை அனேக இடங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கனமழை காரணமாக,  விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை தற்போது மஞ்சள் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

[youtube-feed feed=1]