சென்னை

ன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி   காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

தவிரச் சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான  மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.  இன்று, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது.

கேளம்பாக்கம், நாவலூர், புதுப்பாக்கம், மாம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு, திருப்போரூர், மீனம்பாக்கம் உள்படப் பல பகுதிகளில் கனமழை பெய்தது .இவ்வாறு கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.