சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏவும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  இவிகேஎஸ் இளங்கோவின் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு நேற்று பிறந்த நாள். வழக்கமாக அவரது பிறந்த நாள் கோலாகலமாக நடத்தப்படும் நிலையில், கடந்த ஆண்டு அவரது மகன் மறைவுக்கு பிறகு  அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. இந்த நிலையில்,  கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஈரோட்டில்  நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு சென்னை திரும்பினார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இருமல், காய்யசலால் அவதிப்பட்டார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில்  அனுமதித்தனர்.  அங்கு வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போது,  அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மார்ச் மாதம்,  நெஞ்சுவலி மற்றும் கொரோனா தொற்று  காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா!