சென்னை:  தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இந்த  அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.

இந்தஅகவிலைப்பட உயர்வு கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுவழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுடள்ளது.

இதன்மூலம்,   அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.