தெஹ்ரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஈரானில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனல்  அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதாக   குழு தெரிவித்துள்ளது ஈரானின் புரட்சிகர காவலர்கள், ஹனியே மற்றும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் தலைநகர் தெஹ்ரானில் “கொலை செய்யப்பட்டனர்” என்று ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில்  பெரும் உயிர்சேதம் நிகழ்ந்துள்ளது. இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இதனால், இஸ்ரேலில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில்,  உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது. அதபோல போர் காரணமாக, ஒரு லட்சத்துக்கும்   மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இருந்தாலும்,  ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.