பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், “சூழ்நிலை வேறுமாதிரியாக இருந்ததாலேயே விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்தேன்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மல்யுத்தம் எனக்குள் எப்போதும் இருப்பதால் 2032 வரை போட்டியில் இருக்கவே நினைத்திருந்தேன்.

அதற்கான சூழல் இல்லாததாலேயே வெளியேறினேன். எனது எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க முடியாது,

https://x.com/Phogat_Vinesh/status/1824454938946310658

ஆனால் சரியான விஷயத்திற்காக எப்போதும் போராடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.