சென்னை: சென்னையில் நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  6வயது சிறுவனை தெருநாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக சென்னையில் தெருநாய் அதிக அளவில் காணப்படுகிறது. பல இடங்களில் 20 அல்லது 30 தெரு நாய்கள் சேர்ந்து சாலைகளில் திரிவதை பார்க்க முடிகிறது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் கண்டு குரைத்துக்கொண்டே வருவதால் விபத்துக்ளும் ஏற்படுகின்றனர். பலர்  தெரு நாய் கடிக்கும் ஆளாகுகின்றனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தெரு நாய் கடிக்கு ஆளாகின்றனர்.இதுபோன்ற தெரு நாய் கடி தெருநாய் கடியால் உயிரிழப்புகளும், காயங்களும் அதிகளவில் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பல தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோயும் கண்டறியப்பட்டு வருகிறது.  பல பூங்காக்களிலும் தெருநாய்கள் முகாமிட்டு உள்ளன. இதனால் நடை பயிற்சி செல்பவர்களும் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. சென்னையில் தெருநாய்கள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் சென்னையில் பல்வேறு சாலைகளில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.

சமீபத்தில் சென்னை ராயபுரம் பகுதியில் சாலையில் சென்ற 24 பேரை நாய் கடித்து குதறியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் பார்க்கில் விளையாட சென்ற சிறுவனை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்று தினசரி பல பகுதிகளில் தெரு நாய்களின் தாக்குதலில் பலர் காயமடைகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் நாய்க்கு பிஸ்கட் போட்டுக்கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  வீட்டு வாசலில் தெரு நாய்களுக்கு பிஸ்கட் போட்டுக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை  அந்த தெரு நாய் கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் தெருநாயை விரட்டி அடித்தனர். . இதையடுத்து படுகாயம் அடைந்த சிறுவன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.  இச் சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  இது மட்டுமல்லாமல் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, நமது புகார்களை தெரிவிக்கலாம். அல்லது chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணைய தளத்திலும் புகார்களை தெரிவிக்கலாம். இந்த லிங்கில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை சரியான முறையில் நிரப்பி, புகாரை பதிவேற்றலாம்.