சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் மழுவதும் 2763 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி துறை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கு ஜூன் 20ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒருநாள்(ஜூலை 20) கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த குரூப் 2 பதவிகளுக்கான தேர்வின் மூலம் 507 பணியிடங்களும், குரூப் 2ஏ தேர்வு மூலம் 1,820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. குருப் 2 மற்றும் 2 ஏ ஆகிய பதவிக்கான பணியிடங்களுக்கு மொத்தம் 7,90, 376 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.அதன்படி, குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வை நாளை 7,90,376 தேர்வர்கள், தமிழகத்தில் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.

இந்த தேர்வு மூலம் காலியாக 2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 2,763 மையங்களும் சென்னையில் மட்டும் 251 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குரூப் 2 தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. எழுத சென்னையில் மட்டும் 251 தேர்வு மையங்கள் தெயாராக உள்ளது.  சென்னையில் மட்டும்,  75,185 பேர் தேர்வை எழுதவுள்ளனர்.

ஏற்கனவே தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும், சலுகை நேரமாக 9 மணி வரையும், அதற்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

தேர்வுக்கூடத்தில் தேர்வர்களின் தவறான நடத்தை மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக்கூடாதென்றும், தேர்வு நடைபெறுவதற்கு முன்னரோ பின்னரோ அல்லது தேர்வு நடைபெறும் பொழுதோ, தவறாக நடக்கும் தேர்வர்களின் வினாத்தாளுடன் கூடிய விடைத்தொகுப்பு மதிப்பீடு செய்யப்படமாட்டாதெனவும், குறிப்பிட்ட காலம் வரையில் தகுதிநீக்கம் செய்யப்படுவதும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படுமெனவும், ஆள் மாறாட்டம் மற்றும் தேர்வுக்கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து தேர்வர் விலக்கி வைக்கப்படுவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தின் தலைவர் , உறுப்பினர், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், பிற அலுவலர்கள் அல்லது ஊழியர்களின ஆதரவை பெற நேரடியாகவோ, கடிதத்தின் மூலமாகவோ , உறவினர், நண்பர் , காப்பாளர், அலுவலர் அல்லது வேறொருவர் மூலமாக செல்வாக்கை முயற்சித்தால் 3 ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்களெனவும், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் நிரந்தரமாக தடை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.