சென்னை: மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த செயல் இளம் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் என்றும் சாடியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசுப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்டு இருந்தது. அதாவது மாணவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா? மாணவர்களின் தாய், தந்தை சிறையில் உள்ளார்களா? அவர்கள் அதிகளா? என்பது உள்ளிட்ட மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும்படி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது.
இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மதுரை அமீர் ஆலம் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளி மாணவர்கள் மீது வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? தாய், தந்தையர் சிறையில் உள்ளனரா? அவர்கள் அகதிகளா என்பது உட்பட பல்வேறு விவரங்களை தலைமையாசிரியர்கள் மூலம் சேகரித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இது சட்டத்துக்கு புறம்பானது.
அரசிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
விசாரணையின்போது, நீதிபதிகள், மாதிரி பள்ளி எனக்கூறிக் இந்த தகவல்களை ஏன் கேட்கிறீர்கள்? இதை வைத்து என்ன செய்வீர்கள்? என்று நீதிபதிகள் தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேட்டனர். அதற்கு அவர், ‘இத்தகையை பின்னணியில் உள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்’ என்று கூறினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிறப்பு கவனம் என்னவென்று அரசு விளக்கம் தரவில்லை என்ற கூறி, தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
மேலும், அரசின் இந்த அரசாணை, மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் என கருத்து தெரிவித்ததுடன், மாநில அரசின் அறிவிப்பாணை உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறுவதாக உள்ளது. மாணவர்களின் தகவல்கள் உணவுப்பூர்வமானவை. அவற்றை சேகரிப்பது மாணவர்களின் உரிமையை பாதிக்கும். இதுபோன்று தனியார் பள்ளிகளில் இதுபோல் கேட்க துணிவு உள்ளதா? இதுபோன்ற பின்னணி உடைய மாணவர்களின் தகவல்களை சேகரிப்பது அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]