டெல்லி: விமான பயணத்தின்போது, விமான பயணிகள் முக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என இந்திய சிவில் விமான போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என  தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலும் தினசரி பாதிப்பு 500க்கு கீழே குறைந்துள்ளது.  நாடு முழுவதும்  கொரோனா பாதிப்பு 0.02 சதவீதம் ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 98.79% ஆகவும் உயிரிழந்தோர்  1.19% ஆகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் விமான பயணத்தின்போதும் முக்கவசம் அணிய தேவையில்லை என இந்திய அரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் கரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. இதன்படி விமானப் பயணத்தின்போது பயணிகள் இனி கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, முகக்கவசம் அணிய வில்லை எனக்கூறி பயணிகளுக்கு அபராதம் விதிக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ கூடாது. அதேநேரம், கரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பயணிகள் தாமாக முன்வந்து முகக்கவசம் அணியலாம் என அறிவிப்பு கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.

[youtube-feed feed=1]