கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

கோவாவைப் போல சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடற்கரைகளில் கூடாரங்கள் மற்றும் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மதுபான விதிகளை தளர்த்தவும், கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிக்கும் நேரத்தை நள்ளிரவு வரை நீட்டிக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரில் உள்ள பன்னாட்டு ஐ.டி. நிறுவன ஊழியர்கள் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கோவா மற்றும் பாண்டிச்சேரி கடற்கரைக்கு படையெடுப்பது அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக அரசின் இந்த புதிய திட்டம் அவர்களை உற்ச்சாகப்படுத்தியுள்ளது.