டெல்லி

த்திய அரசு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை 2 கட்டமாக நடத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி வெளியான மருத்துவ இளங்கலை படிப்புக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. உச்சநீதிமன்றத்தில் வினாத்தாள் கசிவால் ஏற்பட்ட இந்த பிரச்சினை குறித்த வழக்குகள் நடந்து வருகிறது. எனவே அந்த தேர்வு முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிய வரும்.

நீட் தேர்வைதேர்வை ஜே.இ.இ. நுழைவு தேர்வை போல் 2 கட்டமாக பிரித்து நடத்தலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நீட் தெர்வியும் முதல்நிலை தேர்வு, இறுதித் தேர்வு என 2 கட்டங்களாக தேர்வை நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதல்நிலை தேர்வு பேப்பர், பேனா (எழுத்து தேர்வு) முறையிலும், 2-ம் கட்ட அல்லது இறுதித்தேர்வு கணினி அடிப்படையிலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த 2 கட்ட தேர்வுகளையும் தனித்தனி முகமைகள் மூலம் நடத்துவது பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறது. முதல் நிலை தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மூலமும், இறுதித் தேர்வை தேசிய தேர்வு வாரியம் (என்.பி.இ.)அல்லது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அல்லது அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மூலமும் நடத்தலாமா? என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசிக்கிறார்கள்.  ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்படும் முடிவு அடுத்த ஆண்டு முதல் அமலாகும் எனக் கூறப்படுகிறது.