2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாருக்கும் பயப்படாமல் செயலாற்ற வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “18வது மக்களவைக்கான தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4, 2024) நடைபெறுகிறது. இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றுவதில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையம், மத்திய ஆயுதப்படை, பல்வேறு மாநில காவல்துறை, அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு அதிகாரிகள் இந்தியாவின் கவசம் என்று நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடமையாற்றி வரும் நிலையில் ஒரு சில அரசு அதிகாரிகள் மற்றும் சில அரசு அமைப்புகள் தங்கள் சுய லாபத்திற்காக ஆட்சியாளர்கள் சொல்வதைச் செய்யும் நிலையில் தங்களை தாழ்த்திக் கொண்டுள்ளனர்.

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் பயப்படாமல் கடமையாற்ற வேண்டும்” என்று கார்கே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.