வாணியம்பாடி
வாணியம்பாடியில் அரசு பேருந்தை நிற்த்தாமல் +2 மாணவியை பின்னல ஓட வைத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை ஆலங்காயம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தை நெருங்கியபோது, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத காத்திருந்த மாணவி பேருந்தை கைகாட்டி நிறுத்தினார்.
ஆயினும் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் அதிர்ச்சியடைந்த மாணவி, பஸ்சை விட்டுவிட்டால் தேர்வு எழுதச் செல்ல முடியாதே என்ற அச்சத்தில் பேருந்தை பிடித்துக்கொண்டே பின்னால் ஓடிச் சென்றார். சற்று தொலைவிலேயே சென்று பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியபிறகு மாணவி பஸ்சில் ஏறிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேர்வு எழுதுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜ் மீது தமிழக அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) மேலாண்மை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.