திருச்சி: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான  ‘அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட 15வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த நூடுல்ஸ் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகம், திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இவர் கடந்த 01-09-24 அன்று  இரவு சிறுமி வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார்.

காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் பதற்றம் அடைந்தனர்.  பின்னர் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த  ஜான் ஜுடிமெயில் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதி சடங்கு செய்வதற்குரிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமி இறப்பில் சந்தேகம் உள்ளது என அரியமங்கலம் பொலிசாருக்கு மர்ம நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரியமங்கலம் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது, ஜான் ஜுடிமெயில் உறவினர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் செய்வதறியாது விழித்த அரியமங்கலம் பொலிசார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சட்டரீதியாக பிரேதத்தை கைப்பற்ற முடிவு எடுத்தனர். பின்னர், அவர்களது உறவினர்களிடம் சுமுகமாக பேசி, ‘எங்களுக்கு புகார் வந்துள்ளது, அதன் அடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும். இன்று மாலை 5 மணிக்குள் மருத்துவமனையில் கொண்டு சென்றால்தான் சிறுமியின் உடலை உங்களுக்கு பிரேத பறிசோதனை செய்து கொடுக்க முடியும்’ எனக் கூறி அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுமி குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதனால் இவர் உயிரிழந்திருக்கலாம்’ என அச்சம் எங்களுக்கு என தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று திருச்சியில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் குரங்கமை  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எல்லா விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளின் வெப்பத்தை ஆய்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு விமான நிலையங்களிலும் தனிமைப்படுத்தும் அறை தயாராக உள்ளது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 10 படுக்கைகள் கொண்ட குரங்கம்மை வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில்  இந்தாண்டு டெங்கு காய்ச்சலால் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும், இறப்புகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் தான் உள்ளது. 4 பேர் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் போதையை உருவாக்கும் மருத்துகளை விற்பவர்கள் மீது அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்துகேள்வி எழுப்பினர். அதற்கு, பதில் வறியவர்,  சிறுமி ஜாக்குலின் அமேசான் தளத்தில் விற்கப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை வாங்கி சமைத்து சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து,   சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில், இதுவரை 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அவை  ஆய்விற்காக அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.