ஜெருசலேம்: இஸ்ரோல் காஸா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், காஸா விடுவிக்கப்பட வேண்டிய பிணைக் கைதிகளில் 8 பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே கடந்த 2023 அக்டோபர் 7 முதல் போர் நடைபெற்று வருகிறது. சுமார் ஒன்றை ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வந்தன. இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன அதற்கான பேச்சு வார்த்தை கத்தாரில் நடைபெற்றுவந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் ஜனவரி 15-ஆம் தேதி (ஜனவரி 2025, ஜனவரி) ஒப்பந்தம் ஏற்பட்டு, அது ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
ஒப்பந்தம் அடிப்படையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. அதன்படி, இந்த போர் நிறுத்தம் மொத்தம் 3 கட்டங்களை கொண்டது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது.
33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
இந்த போர் நிறுத்தம் ஜனவரி 18 (2025) மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணிக்கு) அமலுக்கு வரவிருந்தது. முன்னதாக, காசாவுக்கு திரும்பும் பாலஸ்தீனியர்கள் போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 90 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதேவேளை, ஒப்பந்தப்படி இரு தரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்களின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். அதன்படி, இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை முன்னதாக வெளியிட்டுவிட்டது.
ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பணய கைதிகளின் விவரங்கள் ஜனவரி 18 மதியம் 2 மணிவரை (இஸ்ரேல் நேரப்படி 10.30 மணி) வெளியாகவில்லை.
இதனால், போர் நிறுத்தம் அமலுக்கு வராமல் இருந்தது. இதையடுத்து, காசா முனையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 108 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே கடும் இழுபறிக்கு பிறகு, 3 பெண் பணயக் கைதிகளின் பெயர் விவரங்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் அமைப்பு வழங்கியது.
அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜனவரி 19ந்தேதி முதல் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
அதன்படி முதல்கட்டமாக, எமில் டமரி, டொரோன் ஸ்டீன்ப்ரெச்சர், ரோமி கோனன் ஆகிய 3 பெண் பிணைக் கைதிகளைகளையும் இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவில் பணியாற்றி வந்த நான்கு பெண்களையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
இஸ்ரேல் அரசும் தங்கள் சிறைகளில் இருந்து 290 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு பேர் உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் போர் காரணமாக தங்கள் இருப்பிடங்களைவிட்டு தெற்கு காஸாவிலுள்ள அகதிகள் முகாம்களில் பல மாதங்களாக வசித்து வந்த ஆயிரக்கணக்கான வடக்கு காஸா மக்கள் நேற்று (ஜன.27) தங்கள் பகுதிகளுக்குத் திரும்பினார்.
போர் நிறுத்த ஒப்பந்த அமலாக்கத்தின் இரண்டாம் பகுதியாக நான்கு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்த உடனேயே வடக்கு காஸாவுக்குள் பொதுமக்களை அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால், ஹமாஸால் சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் இஸ்ரேல் அரசு பெரிதும் எதிர்பார்த்திருந்த, ராணுவம் சாராத கடைசி பெண் பிணைக்கைதியான ஆர்பெல் யேஹூத் இடம்பெறவில்லை.
இதையடுத்து, அவர் விடுவிக்கப்படும் வரை, வடக்கு காஸாவுக்குள் பாலஸ்தீனர்களை அனுமதிக்கப்போவதில்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் திட்டவட்டமாகக் கூறியது.
இதன் மூலம் தனது ஒப்பந்த வாக்குறுதியை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தில் கத்தார் அரசு தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்துவைத்தது. அதன் பலனாக, வரும் வெள்ளிக் கிழமைக்குள் விடுவிக்கப்படவிருக்கும் அடுத்த மூன்று பிணைக் கைதிகளில் ஆர்பெல் யேஹூதும் ஒருவராக இருப்பார் என்று ஹமாஸ் உறுதியளித்தது.
அதைத் தொடர்ந்து வடக்கு காஸா செல்ல பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் திங்கள்கிழமை (ஜனவரி 27) அனுமதி அளித்தது.
இந்த நிலையில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய 26 பிணைக் கைதி களில் எட்டு பேர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது குறித்து (ஜன.27) செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மென்சர், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்ட அமலாக்கத்தின்போது ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்படும் 33 பிணைக் கைதிகளின் நிலை குறித்த முழு விவரங்களை அந்த அமைப்பினர் இஸ்ரேலிடம் அளித்துள்ளனர். அதில், குறிப்பிட்ட 33 பேரில் எட்டு பேர் கொல்லப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், விடுவிக்கப்படும் 33 பிணைக் கைதிகளில் 25 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். இந்த விவரம், ஏற்கெனவே இஸ்ரேல் உளவுத் துறை சேகரித்திருந்த தகவல்களுடன் ஒத்துப்போகிறது என்றார். மேலும் விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் 33 பேர் என்று டேவிட் மென்சர் குறிப்பிட்டாலும், அவர்களில் ஏழு பேர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.