மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் உச்சமடைந்து வருவதால், மாநிலம் முழுவதும் இன்று இரவு 8மணி முதல் மே1ந்தேதி வரை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு உச்சம்பெற்று வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில், பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவிலும் பல மாவட்டங்களில் ஏற்கனவே பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
மகாராஷ்டிராவில் நேற்று 67,448 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,27,827 ஆகி உள்ளது நேற்று 568 பேர் உயிர் இழந்து மொத்தம் 61,911 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 54,985 பேர் குணமடைந்து மொத்தம் 32,68,449 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,95,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரவு 8 மணியிலிருந்து மே மாதம் 1ம் தேதி வரைக்கும் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.
முழு நேர ஊரடங்கின்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருமண விழாக்கள் நடத்தப்படலாம் என்றும், ஆனால், மண்டபத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடக்கக்கூடாது என்றும், 25 நபர்களுக்கு மேல் விழாக்களில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் அவசர கால அல்லது அத்தியாவசிய சேவைகளுக்கு தவிர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
அரசு அலுவலகங்கள் 15 சதவிகித ஆட்களுடன் செயல்படுவதற்கும், அரசு பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. . அரசு அலுவலர்கள் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது
முழு ஒத்துழைப்பு அளித்து அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே அன்றி பிற நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் இருந்து ஒரு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறு அம்மாநில முதல்வர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
[youtube-feed feed=1]