சென்னை

மிழகத்தில் இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் குறித்த முழு விவரங்களும் வெளி.

சென்னையில் பணி புரியும் மக்கள் தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில்  மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதும்வழக்கமானகும் ,  அதன்படி கடந்த வாரம் சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் மக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர்.

இந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையையொட்டி தொடர் விடுமுறை விடப்படுகிறது.  எனவே தொடர் விடுமுறை, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 23, 24ஆம் தேதிகளில் 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 25, 26ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து 23, 24ஆம் தேதிகளில் 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து 23, 24ஆம் தேதிகளில் இருந்து 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பிற இடங்களுக்கு 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதைப் போல் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு மொத்தம் 1,050 சிறப்பு பஸ்கள் வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 10-ந்தேதி வரையில் இயக்கப்பட உள்ளது.

www.tnstc.in மற்றும் tnstc official app செயலி மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.