சென்னை

ன்று முதல் 25 தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகிறது.

தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆண்டு தோரும் இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுதேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

சமீபத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதன்படி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.. தற்போது 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதனால் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.