விழுப்புரம்

ன்று முதல் விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால் அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. து 6 மாதத்திற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து தீவிர பணியில் இறங்கி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற்று வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந்தேதி நடைபெறுகிறது. தற்போது விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

இன்று  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. வரும் 21 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும்., 24-ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.  வேட்புமனுவை வாபஸ் பெற 26-ந்தேதி கடைசி நாளாகும்.

இன்று  வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  வேட்பாளருடன் 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே தேர்தல் அலுவலகமான விக்கிர வாண்டி தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் மற்ற அனைவரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.

தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளே யாரும் செல்லாத அளவிற்கு எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளதோடு அங்கு காவல்துறையினர் பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்துள்ளனர்.  தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.