சென்னை

ன்று முதல் சென்னை சென்டிரல் – ஆவடி இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில் இன்று முதல் 28-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில், இன்று மற்றும் நாளை ஆவடி-சென்னை சென்டிரல் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

என அறிவிக்கப்பட்டுள்ளது.