சென்னை

நாளை மறுநாள் முதல் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி ராஜா கூறியுள்ளார்.

தலைநகர் சென்னையில் காற்றின் திசை வேறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இன்றும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி ராஜா இணையப் பக்கத்தில்

 “வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி, தமிழக கடற்கரையை நெருங்கி வருவதன் காரணமாக, செப்.28ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

எனவே தென் தமிழக மாவட்டங்களில் நாளையுடன் அறுவடைப் பணிகளை நிறுத்திவிட்டு, அறுவடை செய்யப்பட்ட பயிர்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும்.”

என்று தெரிவித்துள்ளார்.