நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக பல்வேறு படங்களை தயாரித்து, விநியோகித்து வருகிறார்.

இந்நிலையில் 2டி எண்டர்டெயின்மென்ட் பெயரைப் பயன்படுத்தி ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில், ”எங்கள் பெயர் மற்றும் லோகோவுடன் போலியான இமெயில் முகவரியை உருவாக்கி நடிகர், நடிகையர் தேர்வுக்கு ஒருவர் அழைப்பு விடுப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.

எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற குற்றத்துக்காக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். வருங்காலங்களில் இதுபோன்ற நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். மேலும் இதுபோன்ற நபர்களிடம் உங்களின் சுய விவரங்களை தெரிவிக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் போலியான இமெயில் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.