சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமான நிலையில், அவரது மறைவுக்கு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏவின் மறைவுக்கு சபாநாயகர் இரங்கல் தெரிவித்தார். இதையடுத்து அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவில் இருந்து 1970-ல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம், 1980-ல் நெல்லை பாளையம்கோட்டை ஆகிய தொகுதிகளில் இருந்து எம்எல்ஏ-வாக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன். அதிமுகவில் இருந்து விலகி திமுக-வில் இணைந்து 2000-ல் தென்காசி தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றிருந்தார் பின்னர் கடந்த 2020-ல் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதிமுக மாவட்ட கட்சி பொறுப்புகளில் முக்கிய அங்கம் வகித்து வந்த கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு இரங்கம் தீர்மானம் வாசித்தார். அதைத்தொடர்ந்து, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு சில விநாடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.