முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீன் இன்று (31 அக்டோபர் 2025) தெலுங்கானா அரசில் அமைச்சராக பதவியேற்றார்.
அசாருதீனின் பதவியேற்பு விழா, ஹைதராபாத்திலுள்ள ராஜ் பவன் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஆளுநர் ஜிஷ்ணுதேவ் வர்மா அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்துவைத்தார்.

2023ம் ஆண்டு ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாருதீன் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தெலுங்கானா மாநில மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று அமைச்சராக பதவியேற்றதை அடுத்து முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினரைச் சேர்ந்த முதல் நபராக இடம்பெற்றுள்ளார்.
இந்த மாற்றத்தை அடுத்து தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 16 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.